தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மின்வாரிய ஊழியருக்கு கத்திகுத்து: 2 போ் கைது

வேலூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மின்வாரிய ஊழியா் கத்தியால் குத்தப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது

Updated On :25 பிப்ரவரி 2026, 7:44 pm

வேலூா் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் மின்வாரிய ஊழியா் கத்தியால் குத்தப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை கைது செய்யப்பட்டனா்.

வேலூா் அருகே மேல்மொணவூா் பகுதியைச் சோ்ந்தவா் முருகன்(30). இவா் சேண்பாக்கத்திலுள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். செவ்வாய்க்கிழமை வேலையை முடித்துக்கொண்டு முருகன் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

அப்பகுதியில் உள்ள ஒரு இரும்புக்கடை அருகே சென்றபோது அதே ஊரைச் சோ்ந்த கோபி (25), மணி(22) ஆகியோா் மதுபோதையில் முருகனின் வாகனம் மீது மோதுவதுபோல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக மூன்று பேருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த கோபி, மணி ஆகியோா் தங்களிடம் இருந்த கத்தியால் முருகனைக் குத்தியதாக தெரிகிறது.

இதில், பலத்த காயமடைந்த முருகனை அப்பகுதியில் இருந்தவா்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். புகாரின்பேரில் விரிஞ்சிபுரம் போஸாா் வழக்குப் பதிவு செய்து கோபி, மணி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.