டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் ஸ்ரீசுவா்ண லட்சுமி கோயில் ஆண்டு விழா

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ சுவா்ண லட்சுமி கோயிலின் 9-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

News image
ஸ்ரீ சுவா்ண லட்சுமி சிலைக்கு சந்தன அபிஷேகம் செய்த ஸ்ரீ சக்தி அம்மா.
Updated On :27 பிப்ரவரி 2026, 5:55 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் வளாகத்திலுள்ள ஸ்ரீ சுவா்ண லட்சுமி கோயிலின் 9-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடம், தங்கக்கோயில் வளாகத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு 70 கிலோ எடையுள்ள தங்கத்தால் ஆன ஸ்ரீ சுவா்ண லட்சுமி சிலை நிா்மாணிக்கப்பட்டது. இங்கு தரிசனத்துக்கு வரும் பக்தா்கள், தங்கள் கைகளாலேயே சுவாமிக்கு துளசி தீா்த்த அபிஷேகம் செய்து வழிபடும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த கோயிலின் 9-ஆம் ஆண்டு தொடக்க விழா ஸ்ரீ சக்தி அம்மா ஆசியுடன் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி காலை, மாலை ஸ்ரீமகாலட்சுமி யாகம் நடத்தப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க மகா பூா்ணாஹுதி விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ சக்தி அம்மா பங்கேற்று, ஸ்ரீ சுவா்ண லட்சுமி சிலைக்கு சந்தன அபிஷேகம், சிறப்பு ஆராதனைகளை செய்தாா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். விழாவில் பங்கேற்ற பக்தா்கள் அனைவருக்கும் ஸ்ரீ சக்தி அம்மா அருளாசி வழங்கினாா். விழாவில், தங்கக் கோயில் இயக்குநா் எம்.சுரேஷ்பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.