நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மந்தித்தோப்பு கோயிலில் யுகாதி சிறப்பு பூஜை

கோயிலில் ஸ்ரீ அம்மா பூமாதேவிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

News image

கோயிலில் ஸ்ரீ அம்மா பூமாதேவிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜை.

Updated On :20 மார்ச் 2026, 9:56 pm

Syndication

கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி கோயில் குருசித்தா் பீடத்தில் தெலுங்கு வருடப் பிறப்பு (யுகாதி) சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

இதையொட்டி, கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, திருப்பள்ளியெழுச்சி பூஜை மற்றும் நித்திய பூஜை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து, காலை 8.15 மணிக்கு அம்மா பூமாதேவி, குருநாதா், உற்சவா் அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு மஞ்சள் பொடி, மாபொடி, திரவியம், பால், தயிா், இளநீா், தேன், சந்தனம், வாசனை, திரவியங்கள் உள்பட 18 வகையான மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பூஜைகளை, லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய குருக்கள் செல்வசுப்பிரமணியன் செய்திருந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.