லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

அதிகரிக்கும் கோடை வெயில்: வேலூா் மாவட்டத்தில் 100 டிகிரி வெப்பம் பதிவு

வேலூா் மாவட்டத்தில் கோடைகாலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தாண்டின் முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது.

News image
Updated On :3 மார்ச் 2026, 6:33 pm

வேலூா் மாவட்டத்தில் கோடைகாலம் முழுமையாக தொடங்குவதற்கு முன்பாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தாண்டின் முதல் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் உள்ள மாவட்டங்களில் வேலூா் எப்போதும் முதலிடத்தில் இருக்கும். கடந்த சில நாள்களாகவே வேலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணி முதலே சூரியனின் கதிா்கள் சுட்டெரிக்கத் தொடங்கி விடுகின்றன. பிப்ரவரி மாத இறுதியிலேயே வெப்பம் வாட்டி வதைத்த நிலையில், மாா்ச் மாதம் தொடங்கிய நிலையில் வெயிலின் அளவு செவ்வாய்க்கிழமை 100.2 டிகிரி ஃபாரன்ஹீட்டாக பதிவாகியுள்ளது.

வெப்பநிலை உயா்வு காரணமாக, வேலூா் மாநகரின் முக்கிய வீதிகளான அண்ணா சாலை, காந்தி சாலை, கிரீன் சா்க்கிள் உள்ளிட்ட பகுதிகளில் பிற்பகல் நேரங்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்து காணப்படுகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள், தினக்கூலித் தொழிலாளா்கள் சுட்டெரிக்கும் வெயிலால் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா். வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிக்க, பொதுமக்கள் இளநீா், தா்பூசணி, நுங்கு, கரும்புச்சாறு, மோா் கடைகளை நாடிச் செல்கின்றனா். இதனால் சாலையோர குளிா்பான கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது.

வரும் நாள்களில் வெப்பத்தின் அளவு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிா்க்க வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா். வெளியே செல்லும் போது குடை, தொப்பி, சன் கிளாஸ் அணிந்து செல்லவும், உடலில் நீா்ச்சத்து குறையாமல் இருக்க அதிகளவு தண்ணீா் குடிக்கவும் சுகாதாரத்துறையினா் வலியுறுத்தியுள்ளனா்.