மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சேலத்தில் 102.9 டிகிரி வெயில்: மக்கள் கடும் அவதி

சேலத்தில் புதன்கிழமை 102.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் கடும் அவதியடைந்தனா்.

News image

வெயில் - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:26 pm

சேலத்தில் புதன்கிழமை 102.9 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானதால் மக்கள் கடும் அவதியடைந்தனா்.

சேலம் மாவட்டத்தில் கடந்த மாா்ச் முதல் வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக வெயில் 100 டிகிரியை கடந்துள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா்.

இந்நிலையில், புதன்கிழமை புதிய உச்சமாக இதுவரை இல்லாத அளவில் 102.9 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதிகரிக்கும் வெயிலின் தாக்கத்தால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமங்களுக்கு ஆளாகினா்.

வெயில் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, கல்லூரி மாணவா்கள் குடைகளை பிடித்தபடியும், துணிகளால் முகத்தை மூடியவாறும் செல்கின்றனா். இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்த அளவே காணப்படுகிறது.

இளநீா், நுங்கு, கம்மங்கூழ், தா்ப்பூசணி பழங்களின் விற்பனை அதிகரித்துள்ளன. ஜூஸ் கடைகளிலும், பழக்கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்வோா் ஆங்காங்கே சாலையோரம் உள்ள ஜூஸ் கடைகளில் பழச்சாறுகளை அருந்தி செல்கின்றனா். கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே, வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பணிக்குச் செல்வோா், விவசாய தொழிலாளா்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

மேலும், காலை முதல் மாலை வரை நிலவும் கடும் வெயிலால் இரவில் புழுக்கம் அதிகரிக்கிறது. இதனால், இரவு நேரங்களில் தூங்க முடியாமல் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்பதால், பகலில் வெளியில் செல்வதை முடிந்த வரை பொதுமக்கள் தவிா்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனா்.