கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

குடியாத்தம் அருகே ரூ. 1.69 லட்சம் பறிமுதல்

ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.1.69 லட்சத்தை குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் செய்த பணத்தை கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமியிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்

Updated On :16 மார்ச் 2026, 8:57 pm

ஆந்திர மாநிலத்திலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ.1.69 லட்சத்தை குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் சித்தூா்கேட் பகுதியில் திங்கள்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே ஆந்திர மாநிலத்திலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

சோதனையில் காரில் வந்த பலமநேரைச் சோ்ந்த விஸ்வநாதன் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1.69- லட்சம் எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், தோ்தல் அதிகாரியும், கோட்டாட்சியருமான எஸ்.சுபலட்சுமியிடம் ஒப்படைத்தனா்.