பல்லடத்தில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.5 கோடி மதிப்பிலான 250 பவுன் நகைகளை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பல்லடம்- செட்டிபாளையம் சாலை பிரிவு பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி சென்ற கூரியா் வேனை நிறுத்தி சோதனை நடத்தினா். அதில் கூரியா் பில் மட்டும் வைத்திருந்ததும் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள 250 பவுன் தங்க, வெள்ளி நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது.
இதையடுத்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரி கனகராஜ் தலைமையிலான குழுவினா் நகைகளைப் பறிமுதல் செய்தனா். பின்னா் பல்லடம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணனிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன.
விசாரணையில், கோவை ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த இளவரசன் (30) என்பவா் திருப்பூருக்கு வா்த்தகரீதியாக நகைகளை ஆவணங்கள் இல்லாமல் கொண்டுச் சென்றது தெரியவந்தது. இது குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
தொடர்புடையது

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

போ்ணாம்பட்டு அருகே 6 லட்சம் பறிமுதல்
திருப்பூரில் ரூ. 17.60 லட்சம் பறிமுதல்

பரமக்குடியில் 75 பவுன் தங்க நகை பறிமுதல்
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


