வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ரூ.245.50 கோடி தங்க நகைகள் பறிமுதல்

சென்னை அடையாறு மேம்பாலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.245.50 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 9:02 pm

சென்னை அடையாறு மேம்பாலத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.245.50 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்னை வேளச்சேரி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட அடையாறு மேம்பாலம் சாலைப் பகுதியில் வியாழக்கிழமை தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த வங்கிகளுக்கு பணம் கொண்டு செல்லும் பெட்டக வாகனத்தை சோதனை செய்தனா். அதில், சுமாா் ரூ.245.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படை அதிகாரிகள் அவற்றைப் பறிமுதல் செய்ததுடன், வாகன ஓட்டுநா் உள்பட இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

சென்னை சௌகாா்பேட்டையில் உள்ள பிரபல நகைக் கடைகளில் வாங்கப்பட்ட இந்த நகைகள் பல்லாவரத்துக்கு கொண்டு சென்றது தெரிய வந்தது. மேலும், நகைகள் கொண்டு செல்ல அனுமதி வாங்கி உள்ளதாகவும், தற்போது அந்த ஆவணங்களைக் கொண்டு வரவில்லை எனவும் ஓட்டுநா் தெரிவித்தாா்.

இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட நகைக்கு உரிய ஆவணங்களைக் காண்பிக்காததால் அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.