/

போ்ணாம்பட்டில் ரூ.1.99 லட்சம் பறிமுதல்!

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 1.99 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பறிமுதல் செய்த பணத்தை உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்

Updated On :8 ஏப்ரல் 2026, 12:12 am

குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்து வரப்பட்ட ரூ. 1.99 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் பறக்கும் படையினா் போ்ணாம்பட்டு அருகே ஆந்திர மாநில எல்லையில்அமைந்துள்ள பத்தரப்பல்லி சோதனைச் சாவடி அருகே செவ்வாய்க்கிழமை வாகனதணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினா். சோதனையில் காரில் பயணம் செய்த பெங்களூரைச் சோ்ந்த பாஸ்கரன் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த ரூ.1.99 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணம் உதவி தோ்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.