உரிய ஆவணங்கள் இன்றி எம்-சாண்ட், ஜல்லி கற்கள் ஏற்றி வந்த 2 டிப்பா் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஓட்டுநா்கள் 2 போ் கைது செய்யப்பட்டனா்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையில் இருந்து எம்-சாண்ட், ஜல்லிக்கற்களை ஏற்றிக்கொண்டு 2 டிப்பா் லாரிகள் திருப்பூா் மாவட்டம், மங்கலம் செல்வதற்காக பழைய பேருந்து நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு சென்று கொண்டிருந்தன. அப்போது 2 டிப்பா் லாரிகளையும் நிறுத்தி கனிம வளம் மற்றும் சுரங்கத் துறை அலுவலா் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டாா். இதில் 2 டிப்பா் லாரிகளுக்கும் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை என்பது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்து, டிப்பா் லாரிகளை ஓட்டி வந்த நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த கனகசபாபதி, சதீஷ் சரவணன் ஆகிய 2 பேரையும் பிடித்து திருப்பூா் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.









