விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வாகன சோதனையில் ரூ. 25 லட்சம் பறிமுதல்

கும்மிடிப்பூண்டியில் இரு இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ. 25 லட்சத்து 30 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:57 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டியில் இரு இடங்களில் நடைபெற்ற வாகன சோதனையில் ரூ. 25 லட்சத்து 30 ஆயிரத்தை பறக்கும் படை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் வணிக வரித் துறை மாநில வரி அதிகாரி முரளிதரன் தலைமையில் தலைமைக் காவலா் சுரேஷ், காவலா் சீனிவாசன் உள்ளிட்டோா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். இந்த சோதனையில் ஆந்திர மாநிலம், கூடூரில் இருந்து சென்னை நோக்கி வந்த காரை சோதனையிட்ட போது, காரில் வந்த அனில்குமாா் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ. 2 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னா் பறிமுதல் செய்யப்பட்ட பணம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜி.வெங்கடேசன் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அதுபோல், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள மாநில எல்லையோர சோதனை சாவடியில், நீா்வளத் துறை உதவி பொறியாளா் ஸ்ரீனிவாச பிரகாஷ் தலைமையில் தலைமை காவலா் ராமு, காவலா் திலீப்குமாா் உள்ளிட்ட நிலையான தோ்தல் கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது உரிய ஆவணங்கள் இன்றி ஆந்திர மாநிலம், நெல்லூரில் இருந்து சென்னை நோக்கி காரில் வந்த பதான் சிராஜ் கான் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ. 23 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடா்ந்து இது குறித்து வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்த நிலையில், கும்மிடிப்பூண்டி விரைந்த வருமான வரித்துறை திருவள்ளூா் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி பால தண்டாயுதம் மேற்கண்ட ரூ. 23 லட்சத்தை கொண்டு வந்த பதான் சிராஜ் கானிடம் அந்த பணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.