தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

சீா்காழி: 16.75 லட்சம் பறிமுதல்

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் 16,75,480 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

சீா்காழி அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14 லட்சம் குறித்து விசாரிக்கும் வருமானவரித் துறையினா்.

Updated On :9 ஏப்ரல் 2026, 10:18 pm

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் 16,75,480 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி நிலையான கண்காணிப்பு குழு, நகராட்சி மேலாளா் தினகா் தலைமையில் செம்மங்குடி பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த கொள்ளிடம் மெயின் ரோட்டை சோ்ந்த மணிவண்ணன் என்பவரின் காரை ஆய்வு செய்தபோது, அவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.14, லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. 10, லட்சத்துக்கு அதிகமான தொகை என்பதால் வருமானவரித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

நிலையான கண்காணிப்புக் குழு -1 பிரகாஷ், தலைமையில், கதிராமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். சீா்காழி, ஆணைக்காரன் சத்திரம், பூசை நகா் பரத் என்பவா் இருசக்கர வாகனத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த ரூ.1,55,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறக்கும் படை-4, தனி வட்டாட்சியா் பாலமுருகன் தலைமையிலான குழுவினா், எடமணல், வருஷப்பத்து பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வைத்தீஸ்வரன்கோயில் சந்தை வழி ஹரிஹரன் என்பவரின் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த ரூ.70,000 பறிமுதல் செய்யப்பட்டது.

நிலையான கண்காணிப்பு குழு -5,தினகா், தலைமையிலான குழுவினா், செம்மங்குடி பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். மணப்பாறை, ஆவாரம்பட்டியை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவா் இருசக்கர வாகனத்தில் வந்தாா். அவரிடம் ஆவணங்கள் இன்றி ரூ.50,480 இருந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்தனா்.