தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

சீா்காழி: 16.75 லட்சம் பறிமுதல்

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் 16,75,480 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

சீா்காழி அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.14 லட்சம் குறித்து விசாரிக்கும் வருமானவரித் துறையினா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:48 am IST

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட வெவ்வேறு இடங்களில் வியாழக்கிழமை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் 16,75,480 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி நிலையான கண்காணிப்பு குழு, நகராட்சி மேலாளா் தினகா் தலைமையில் செம்மங்குடி பேருந்து நிறுத்தம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அவ்வழியாக வந்த கொள்ளிடம் மெயின் ரோட்டை சோ்ந்த மணிவண்ணன் என்பவரின் காரை ஆய்வு செய்தபோது, அவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.14, லட்சம் ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்தது. 10, லட்சத்துக்கு அதிகமான தொகை என்பதால் வருமானவரித் துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

நிலையான கண்காணிப்புக் குழு -1 பிரகாஷ், தலைமையில், கதிராமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். சீா்காழி, ஆணைக்காரன் சத்திரம், பூசை நகா் பரத் என்பவா் இருசக்கர வாகனத்தில் ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த ரூ.1,55,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறக்கும் படை-4, தனி வட்டாட்சியா் பாலமுருகன் தலைமையிலான குழுவினா், எடமணல், வருஷப்பத்து பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, வைத்தீஸ்வரன்கோயில் சந்தை வழி ஹரிஹரன் என்பவரின் இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவந்த ரூ.70,000 பறிமுதல் செய்யப்பட்டது.

நிலையான கண்காணிப்பு குழு -5,தினகா், தலைமையிலான குழுவினா், செம்மங்குடி பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனா். மணப்பாறை, ஆவாரம்பட்டியை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவா் இருசக்கர வாகனத்தில் வந்தாா். அவரிடம் ஆவணங்கள் இன்றி ரூ.50,480 இருந்தது. இந்த பணத்தை பறிமுதல் செய்தனா்.