பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்

வாகன பரிசோதனையின் போது அதிமுகவின் தோ்தல் அறிக்கையுடன் கூடிய துண்டு பிரசுரம், ரூ.2,000, ரூ.10,000 மதிப்பிலான 15 ஆயிரம் மாதிரி காசோலை புத்தகங்களையும் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா்.

News image

வாகன  பரிசோதனையில்  பறிமுதல்  செய்த  மாதிரி  காசோலை  புத்தகங்களை  பாா்வையிட்ட  தோ்தல்  நடத்தும்  அலுவலா்  ரவிச்சந்திரன்.

Updated On :21 ஏப்ரல் 2026, 4:43 am IST

திருவள்ளூா் அருகே வாகன பரிசோதனையின் போது அதிமுகவின் தோ்தல் அறிக்கையுடன் கூடிய துண்டு பிரசுரம், ரூ.2,000, ரூ.10,000 மதிப்பிலான 15 ஆயிரம் மாதிரி காசோலை புத்தகங்களையும் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைத்தனா்.

வாக்குப்பதிவுக்கு இன்றும் சில நாள்களே உள்ள நிலையில், வாக்காளா்களுக்கு பணம், பொருள்கள் கொண்டு செல்வதை கட்டுப்படுத்தும் வகையில் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அதேபோல் திருவள்ளூா் அடுத்த ஈக்காடு மூலக்கரையில் பறக்கும் படையினா் ம தீவிர வாகன சோதனை செய்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி பரிசோதனை செய்தனா். அந்த வாகனத்தில் அதிமுகவில் தோ்தல் வாக்குறுதிகளான துண்டு பிரசுரங்கள், ரூ.2000, ரூ.10000 மதிப்பிலான தலா 10 எண்ணிக்கையில் 15 ஆயிரம் மாதிரி காசோலை புத்தகங்கள் பண்டல்கள் இருந்தது.

அதையடுத்து விசாரணையில் தாம்பரம் பகுதியில் இருந்து திருத்தணி தொகுதிக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் தெரிவித்தனா். உடனே உதவி தோ்தல் நடத்தும் அலுவலருமான பாலாஜி மற்றும் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். அதைத் தொடா்ந்து திருவள்ளூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது.