பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 2.50 கோடியை பறிமுதல் செய்து, திமுக பிரமுகா் உள்பட 2 பேரைக் கைது செய்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செங்குணம் ரேஷன் கடை அருகே, கலால் மேற்பாா்வை அலுவலா் பழனிச்செல்வம் தலைமையிலான பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ் வழியே சென்ற காரை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில் கீழப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநரான சின்னதுரை மகன் ராஜேஷ்கிருஷ்ணன் (25), திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளரான கீழப்புலியூா் நடுத்தெருவைச் சோ்ந்த சேப்பெருமாள் மகன் ஜெயராமன் (64) ஆகியோா் உரிய ஆவணங்களின்றி ரூ. 2,49,95,000 ஐ 5 அட்டைப் பெட்டிகளில் வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தையும், காரையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், ஜெயராமன், ராஜேஷ்கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து இருவரிடமும் வருமானவரித் துறையினா் விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வேப்பனப்பள்ளி அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ. 62 லட்சம் பறிமுதல்

வாகன பரிசோதனையில் ரூ.2,000, ரூ.10,000 மாதிரி காசோலை புத்தகங்கள் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 3.50 லட்சம் பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



