/

சோளிங்கரில் ரூ.50,000 பறிமுதல்

சோளிங்கா் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

தோ்தல் நடத்தும் அலுவலா் மீனாவிடம் தொகையை ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :12 ஏப்ரல் 2026, 6:15 pm

சோளிங்கா் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் சனிக்கிழமை நடத்திய சோதனையில் ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.50,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சோளிங்கா், கருமாரியம்மன் கோயில் கூட்டுச்சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த காரில் திருவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டைச் சோ்ந்த நபா் ரூ.50,000 ரொக்கம் வைத்திருந்தது தெரியவந்து அவரிடம் கேட்டபோது தகுந்த ஆவணங்கள் இல்லையென தெரியவந்தது.

இதையடுத்து அலுவலா்கள் அத்தொகையை பறிமுதல் செய்து தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மீனாவிடம் ஒப்படைத்தனா். அவருடன் நெமிலி வட்டாட்சியா்கள் ராஜலட்சுமி, அருள்செல்வன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.