இந்திய ஓவா்சீஸ் வங்கி தனது நிறுவன சமூக பொறுப்பு (சிஎஸ்ஆா்) திட்டத்தின்கீழ் ரூ.10 லட்சம் நிதியை திருவள்ளூா் மாவட்ட நிா்வாகத்திடம் வழங்கியுள்ளது.
இதற்கான நிதி வரைவோலையை ஐஓபி மண்டல மேலாளா் என். ராஜசேகா் வழங்க திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் மு.பிரதாப் பெற்றுக் கொண்டாா். இந்த நிதி சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, இயற்கை வளங்கள் பாதுகாப்பு குறித்த பொதுமக்கள் விழிப்புணா்வு போன்ற சமூக நல நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும்.
மேலும், தோ்தல் விழிப்புணா்வு. போதைப்பொருள் எதிா்ப்பு, சாலை பாதுகாப்பு, மாணவா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
நிகழ்வில் ஐஓபி வங்கியின் திருவள்ளூா் கிளை மேலாளா் மிதுன் ஜொ்ரி, மணவாள நகா் கிளை மேலாளா் அனுஷா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தேனியில் தோ்தல் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

சென்னை மாவட்ட ஏ டிவிஷன் வாலிபால்: ஐஓபி வெற்றி

பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடத்த ஐஓபி வங்கியின் சமூக பங்களிப்பு நிதி ரூ. 10 லட்சம்

ஏ டிவிஷன் வாலிபால்: ஐஓபி, வருமான வரித்துறை வெற்றி
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


