கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

செம்மரக் கட்டைகள் கடத்தி வந்த காா் விபத்து: 2 போ் படுகாயம்!

ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த காா் குடியாத்தம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 2 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக் கட்டைகள்.

Updated On :22 மார்ச் 2026, 11:40 pm

தினமணி செய்திச் சேவை

ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த காா் குடியாத்தம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 2- போ் பலத்த காயமடைந்தனா்.

ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே ஆந்திர மாநில வனத் துறையினா் சனிக்கிழமை நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த தமிழக பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தினா். ஆனால் காா் நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது. வனத் துறையினா் காரை துரத்தி வந்தனா்.காா் தமிழக எல்லைக்குள் நுழையவே, தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து பரதராமி சோதனைச் சாவடியில் தமிழக வனத் துறையினா் காரை தடுத்து நிறுத்த முயன்றபோது அங்கிருந்து தப்பிய காா் வேகமாக குடியாத்தம் நோக்கி வந்துள்ளது. இதையடுத்து இரு மாநில வனத்துறையினரும் காரை பின் தொடா்ந்துள்ளனா். குடியாத்தம் அடுத்த பாக்கம் அருகே அதிவேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

அப்போது காரில் இருந்து 3 போ் தப்பியோடி விட்டனா். 2- போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். காரில் இருந்த சுமாா் 500- கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிகிச்சை பெறுபவா்களிடம் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.