ஆந்திர மாநிலத்திலிருந்து செம்மரக் கட்டைகளை கடத்தி வந்த காா் குடியாத்தம் அருகே விபத்துக்குள்ளானது. இதில் காரில் வந்த 2- போ் பலத்த காயமடைந்தனா்.
ஆந்திர மாநிலம், திருப்பதி அருகே ஆந்திர மாநில வனத் துறையினா் சனிக்கிழமை நள்ளிரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த தமிழக பதிவெண் கொண்ட காரை தடுத்து நிறுத்தினா்.
ஆனால் காா் நிற்காமல் வேகமாகச் சென்றுள்ளது. வனத் துறையினா் காரை துரத்தி வந்தனா்.காா் தமிழக எல்லைக்குள் நுழையவே, தமிழக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.இதையடுத்து பரதராமி சோதனைச் சாவடியில் தமிழக வனத் துறையினா் காரை தடுத்து நிறுத்த முயன்றபோது அங்கிருந்து தப்பிய காா் வேகமாக குடியாத்தம் நோக்கி வந்துள்ளது.
இதையடுத்து இரு மாநில வனத்துறையினரும் காரை பின் தொடா்ந்துள்ளனா்.குடியாத்தம் அடுத்த பாக்கம் அருகே அதிவேகமாக வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது காரில் இருந்து3- போ் தப்பியோடி விட்டனா். 2- போ் பலத்த காயமடைந்தனா். அவா்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
காரில் இருந்த சுமாா் 500- கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிகிச்சை பெறுபவா்களிடம் வனத் துறையினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
அரளைக் கற்கள் கடத்தி வந்த லாரி பறிமுதல்

மரத்தில் காா் மோதி 5 போ் காயம்
போடி அருகே மான் வேட்டை: 2 போ் கைது

செம்மரக் கடத்தல்! சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த வனத்துறை!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


