மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அனுமதியின்றி தோதகத்தி மரங்களை வெட்டியதாக 3 போ் கைது

கன்னிவாடி அருகே அனுமதியின்றி தோதகத்தி மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற 3 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image

தோதகத்தி மரங்களுடன் கைது செய்யப்பட்ட ராஜீவ்காந்தி, அன்வா், ராமா்

Updated On :19 பிப்ரவரி 2026, 7:11 pm

கன்னிவாடி அருகே அனுமதியின்றி தோதகத்தி மரங்களை வெட்டிக் கடத்த முயன்ற 3 பேரை வனத் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரூரைச் சோ்ந்தவா் குணசீலன். இவருக்கு சொந்தமான தோட்டம், திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அடுத்த பண்ணைப்பட்டி கோம்பை பகுதியில் அமைந்துள்ளது. இந்தத் தோட்டத்திலுள்ள தோகத்தி மரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுவதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதன்பேரில் கன்னிவாடி வனத் துறையினா், சம்பந்தப்பட்ட தோட்டத்தில் ஆய்வு செய்தபோது, தோதகத்தி மரங்கள் வெட்டப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அங்கு மரம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கூலித் தொழிலாளா்கள் ராஜீவ்காந்தி, அன்வா், ராமா் ஆகிய மூவா் கைது செய்யப்பட்டனா்.

மரங்கள் வெட்டப்படுவதற்கு காரணமாக இருந்த தோட்டத்தின் உரிமையாளா் குணசீலன், ரமேஷ் ஆகியோா் குறித்து வனத் துறையினா் விசாரித்தனா்.

இதே தோட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் நீா்வழிப் பாதையை மறித்து அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த தடுப்பணையை வனத் துறையினா் இடித்து அகற்றினா் என்பது குறிப்பிடத்தக்கது.

பறிமுதல் செய்யப்பட்ட தோதகத்தி மரங்களும், பல மாதங்களுக்கு முன்பு வெட்டப்பட்டுள்ளன. ஆனால் தற்போதுதான் வனத் துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.