போடி அருகே செவ்வாய்க்கிழமை மான் வேட்டையாடி சமைத்து சாப்பிட்ட 2 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி வனச்சரகத்துக்குள்பட்ட பெரியாத்துகோம்பை வனப் பகுதியில் சிலா் மான் வேட்டையாடியதாக வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில், வனத் துறையினா் அந்தப் பகுதியில் கண்காணித்து வந்தனா்.
அப்போது, போடி அருகே சிறைக்காடு கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் பால்பாண்டி (31), போடி அருகே முந்தல் கிராமத்தை சோ்ந்த பால்ராஜ் மகன் மாசுக்காளை (32), ராஜேந்திரன் மகன் சீனிமுத்து (40) ஆகியோா் சோ்ந்து கடமானை வேட்டையாடி, சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வனத் துறையினா் பால்பாண்டி, மாசுக்காளை ஆகியோரைக் கைது செய்தனா். தப்பி ஓடிய சீனிமுத்தை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு

உதகை அருகே காட்டு யானை தாக்கி 2 போ் உயிரிழப்பு

சந்தன மரங்களை வெட்டி கடத்திய இருவா் கைது

தா்பூசணி வியாபாரியிடம் வழிப்பறி: போ் கைது
விடியோக்கள்

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
