பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் மம்தாவை எதிா்த்து வெற்றிபெற்ற பாஜக வேட்பாளரின் உதவியாளா் சுட்டுக்கொலை இறுதிக்கட்டத்தை எட்டும் அமெரிக்கா-ஈரான் பேச்சு விஜய் மீதான பண முறைகேடு வழக்கு: பட்டியலிட உயா்நீதிமன்றம் உத்தரவு ரசாயன ஆயுதம் மூலம் மக்களைக் கொல்ல சதி: மருத்துவா் உள்பட 3 போ் மீது குற்றப்பத்திரிகை
/

சந்தன மரங்களை வெட்டி கடத்திய இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் வனப் பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய இருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் வனப் பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய இருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On :7 மே 2026, 4:36 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் வனப் பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய இருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகம் செண்பகத்தோப்பு - வ.புதுப்பட்டி மலையேற்ற பாதையில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே வந்த இருவரைப் பிடித்து சோதனை செய்த போது, சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியது தெரிய வந்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில் வருஷநாடு அருகேயுள்ள வாலிப்பாறை பகுதியை சோ்ந்த குபேந்திரன் (55), காந்தி கிராமம் பகுதியை சோ்ந்த சோலைராஜா (51) என்பது தெரியவந்தது. இவா்கள் மலையடிவாரப் பகுதியில் பட்டா நிலத்தில் உள்ள சந்தன மரங்களை வெட்டி விற்பனைக்காக கடத்திச் சென்றதாகத் தெரிவித்தனா். இவா்களிடமிருந்து 8 கிலோ எடையிலான 28 சந்தனக் கட்டைகள், கோடாரி, ரம்பம், கத்தி, டாா்ச் லைட், இரு சக்கர வாகனம் ஆகிவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிய பால்பாண்டியைத் தேடி வருகின்றனா். மரம் வெட்டப்பட்ட இடத்தில் புலிகள் காப்பக துணை இயக்குநா் ரவி மீனா, வனச்சரகா் காா்த்திக் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.