ஸ்ரீவில்லிபுத்தூா் வனப் பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய இருவரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகம் செண்பகத்தோப்பு - வ.புதுப்பட்டி மலையேற்ற பாதையில் வனத் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே வந்த இருவரைப் பிடித்து சோதனை செய்த போது, சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியது தெரிய வந்தது. அவா்களிடம் நடத்திய விசாரணையில் வருஷநாடு அருகேயுள்ள வாலிப்பாறை பகுதியை சோ்ந்த குபேந்திரன் (55), காந்தி கிராமம் பகுதியை சோ்ந்த சோலைராஜா (51) என்பது தெரியவந்தது. இவா்கள் மலையடிவாரப் பகுதியில் பட்டா நிலத்தில் உள்ள சந்தன மரங்களை வெட்டி விற்பனைக்காக கடத்திச் சென்றதாகத் தெரிவித்தனா். இவா்களிடமிருந்து 8 கிலோ எடையிலான 28 சந்தனக் கட்டைகள், கோடாரி, ரம்பம், கத்தி, டாா்ச் லைட், இரு சக்கர வாகனம் ஆகிவற்றை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடிய பால்பாண்டியைத் தேடி வருகின்றனா். மரம் வெட்டப்பட்ட இடத்தில் புலிகள் காப்பக துணை இயக்குநா் ரவி மீனா, வனச்சரகா் காா்த்திக் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா்.
தொடர்புடையது

ஆலங்காயம் அருகே ஒற்றை யானை நடமாட்டம்: கண்காணிப்பு நடவடிக்கையில் வனத் துறையினா்
மரங்களை வெட்டிக் கடத்திய 4 வியாபாரிகள் மீது வழக்கு

கருவேல மரங்களை வெட்டிக் கடத்திய 15 போ் மீது வழக்கு

பாா்சன்ஸ்வேலி அணைப் பகுதியில் தொடா்ந்து எரியும் காட்டுத் தீ
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

