ஒசூா் அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளை பொதுமக்கள் உதவியுடன் வனத் துறையினா் வனப்பகுதிக்குள் விரட்டினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்துள்ள பாலதொட்டனப்பள்ளி, கண்டகாணப்பள்ளி ஆகிய கிராம பகுதிகளில் நான்கு காட்டு யானைகள் சுற்றித்திரிந்தன. இந்த யானைகள், அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தின. இதுகுறித்து அப்பகுதியினா் தேன்கனிக்கோட்டை வனத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனா்.
விரைந்து சென்ற வனத் துறையினா் கிராம மக்களின் உதவியுடன், பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனா். நீண்ட போராட்டத்திற்கு பிறகு அந்த நான்கு காட்டு யானைகளும் நொகனூா் வனப்பகுதியையொட்டி உள்ள வனப்பகுதிக்கு விரட்டப்பட்டன. அவ்வப்போது இந்தக் காட்டு யானைகள், கிராமப் பகுதிகளுக்குள் வருவதால் கிராம மக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனா்.
எனவே, வனத் துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து இந்த நான்கு யானைகளையும் கா்நாடக மாநில வனப்பகுதிக்கு நிரந்தரமாக விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









