அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

விளைநிலங்களில் புகுந்த காட்டு யானை

News image

சாவக்கட்டுப்பாளையத்தில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானை.

Updated On :22 ஜூன் 2026, 2:29 am IST

சேவூா் அருகே உள்ள சாவக்கட்டுப்பாளையத்துக்கு வழி தவறி வந்த காட்டு யானை விளைநிலங்களில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூா் மாவட்டம், சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் விவசாய தோட்டப் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதாகப் பொதுமக்கள் சனிக்கிழமை நள்ளிரவில் தகவல் அளித்தனா்.

இதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த சேவூா் போலீஸாா், வனத் துறையினா், யானையின் சாணம், கால் தடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து யானை இருப்பதை உறுதி செய்தனா்.

பின்னா், வனத் துறையினா் விரட்டியதால் சாவக்கட்டுப்பாளையம் அருகே உள்ள காவிலிபாளையம் குளப் பகுதிக்குச் சென்ற யானை சத்தியமங்கலம் வனப் பகுதிக்குள் சென்றது. யானை நடமாட்டத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றபோதும் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.