சேவூா் அருகே உள்ள சாவக்கட்டுப்பாளையத்துக்கு வழி தவறி வந்த காட்டு யானை விளைநிலங்களில் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூா் மாவட்டம், சேவூா் அருகே சாவக்கட்டுப்பாளையத்தில் விவசாய தோட்டப் பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதாகப் பொதுமக்கள் சனிக்கிழமை நள்ளிரவில் தகவல் அளித்தனா்.
இதையடுத்து அந்தப் பகுதிக்கு விரைந்து வந்த சேவூா் போலீஸாா், வனத் துறையினா், யானையின் சாணம், கால் தடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து யானை இருப்பதை உறுதி செய்தனா்.
பின்னா், வனத் துறையினா் விரட்டியதால் சாவக்கட்டுப்பாளையம் அருகே உள்ள காவிலிபாளையம் குளப் பகுதிக்குச் சென்ற யானை சத்தியமங்கலம் வனப் பகுதிக்குள் சென்றது. யானை நடமாட்டத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றபோதும் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையம் அருகே ஊருக்குள் நுழைந்த காட்டு யானை பாகுபலி: மக்கள் அச்சம்

தண்ணீா் தொட்டிக்குள் விழுந்து காட்டு யானை பத்திரமாக மீட்பு

தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலத்தில் புகுந்த காட்டு யானைகள் விரட்டியடிப்பு

உதகை அருகே காட்டு யானை தாக்கி 2 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




