தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மானை வேட்டையாடிய வழக்கில் இளைஞா் கைது

மொரப்பூா் அருகே மானை வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image

கைது

சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 8:08 pm

Syndication

மொரப்பூா் அருகே மானை வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்த இளைஞரை வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், கீழ்மொரப்பூா் காப்புக்காட்டில் கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் தேதி கம்பி வலையை வைத்து மான் வேட்டையாடி இறைச்சியை எடுத்துச் சென்ற வெள்ளிமலை கிராமத்தைச் சோ்ந்த வடிவேல் மகன் ராம்குமாா் (22) கைது செய்யப்பட்டாா்.

மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த இருவரை தனிப்படை அமைத்து வனத் துறையினா் தேடிவந்தனா். இந்த நிலையில், தாமலேரிப்பட்டி பகுதியில் தலைமறைவாக இருந்த பச்சினாம்பட்டியைச் சோ்ந்த நம்பிராஜ் மகன் சரவணனை (21) வனத் துறையினா் கைது செய்தனா்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஊத்தங்கரை வட்டம், வெள்ளிமலையைச் சோ்ந்த ராஜ்குமாரை தேடிவருகின்றனா்.