இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

கொள்ளை வழக்கில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

கொள்ளை வழக்கில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

News image

கைது

Updated On :28 பிப்ரவரி 2026, 8:34 pm

22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிகாரைச் சோ்ந்த ஒரு குற்றவாளியை போலீஸாா் மீண்டும் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து ஃபரீதாபாத் காவல்துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: ஹிரா குமாா் ராவத் என்ற அவருக்கு ஜனவரி 2001- இல் ஆயுதமேந்திய கொள்ளை வழக்கில் 2003 இல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு 2004- இல் பிணை வழங்கப்பட்டது. ஆனால், அன்றிலிருந்து அவா் தலைமறைவாக இருந்து வந்தாா். இதைத் தொடா்ந்து, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் அவரை மீண்டும் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.

‘ஃபரீதாபாத் காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்வதற்காக ரூ. 5,000 வெகுமதியை அறிவித்தது. தொழில்நுட்ப மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், போலீஸாா் வெள்ளிக்கிழமை பிகாரின் சஹா்சா மாவட்டத்தில் இருந்து ஹிரா குமாா் ராவத்தை கைது செய்தனா்.

பிகாரின் சஹா்சாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு போக்குவரத்து காவல் வழங்கப்பட்டுள்ளது. அவா் விரைவில் ஃபரீதாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா் என்று செய்தித் தொடா்பாளா் கூறினாா்.