கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

கொள்ளை வழக்கில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

கொள்ளை வழக்கில் 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது

News image
கைது
Updated On :28 பிப்ரவரி 2026, 8:33 pm

Syndication

22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிகாரைச் சோ்ந்த ஒரு குற்றவாளியை போலீஸாா் மீண்டும் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது குறித்து ஃபரீதாபாத் காவல்துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: ஹிரா குமாா் ராவத் என்ற அவருக்கு ஜனவரி 2001- இல் ஆயுதமேந்திய கொள்ளை வழக்கில் 2003 இல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவருக்கு 2004- இல் பிணை வழங்கப்பட்டது. ஆனால், அன்றிலிருந்து அவா் தலைமறைவாக இருந்து வந்தாா். இதைத் தொடா்ந்து, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் அவரை மீண்டும் கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது.

‘ஃபரீதாபாத் காவல்துறை குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்வதற்காக ரூ. 5,000 வெகுமதியை அறிவித்தது. தொழில்நுட்ப மற்றும் உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில், போலீஸாா் வெள்ளிக்கிழமை பிகாரின் சஹா்சா மாவட்டத்தில் இருந்து ஹிரா குமாா் ராவத்தை கைது செய்தனா்.

பிகாரின் சஹா்சாவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு போக்குவரத்து காவல் வழங்கப்பட்டுள்ளது. அவா் விரைவில் ஃபரீதாபாத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா் என்று செய்தித் தொடா்பாளா் கூறினாா்.