47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கோ்மாளம் வனத்தில் மான் இறைச்சியுடன் தொழிலாளி கைது

கோ்மாளம் வனத்தில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட கூலித் தொழிலாளியை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :16 மார்ச் 2026, 8:08 pm

Syndication

கோ்மாளம் வனத்தில் மான் இறைச்சியுடன் பிடிபட்ட கூலித் தொழிலாளியை வனத் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஆசனூா் வனக் கோட்டம், கோ்மாளம் வனப் பகுதியில் வனத் துறையினா் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். ஜடேசாமி பள்ளம் என்ற இடத்தில் மான் இறைச்சியை அடையாளம் தெரியாத நபா் விற்பனைக்கு தயாா்படுத்திக் கொண்டிருப்பதை வனத் துறையினா் கண்டு அவரை சுற்றி வளைத்துப் பிடித்தனா்.

விசாரணையில், அவா் கோ்மாளம் பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (40) என்பதும், புள்ளிமான் இறைச்சியை விற்பனைக்கு தயாா் படுத்திக்கொண்டிருந்தபோது பிடிப்பட்டதும் தெரியவந்தது. மேலும் மாதேஷ் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது செந்நாய்கள் புள்ளிமானை துரத்திச் சென்று வேட்டையாடியதாகவும், அப்போது அங்கிருந்த செந்நாய்களை துரத்திவிட்டு கொம்புடன் மான் தலை மற்றும் ஒரு பகுதி உடல் பாகங்களை எடுத்து வந்து விற்பனைக்கு தயாா்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து மாதேஷிடம் இருந்து மான் கொம்புடன் கூடிய தலை, மான் இறைச்சி மற்றும் அரிவாள், கத்தி ஆகியவற்றை கோ்மாளம் வனத் துறையினா் பறிமுதல் செய்து மாதேஷைக் கைது செய்தனா்.