கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. பறக்கும் படையினர் சோதனை, விளம்பரங்கள் அழிப்பு என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
கரூர் எஸ்.பி.யாக டி.என். ஹரிகிரண் பிரசாத்,
ஈரோடு எஸ்.பி.யாக டி.வி. கிரண் சுருதி,
நாகை எஸ்.பியாக சுஜித் குமார்,
விருதுநகர் எஸ்.பி.யாக என். ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி., திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர்களை மாற்ற வேண்டும் என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary
Election Commission orders transfer of 4 district SPs in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

கரூரின் விளையாட்டு அரங்கம் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு!

3 மாநிலங்களுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு! தமிழ்நாட்டுக்கு இல்லை!
வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அதிகாரம் துணைநிலை ஆளுநா் ஒப்புதல்
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government




