கரூர், ஈரோடு, நாகப்பட்டினம், விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரேகட்டமாக 234 தொகுதிகளுக்கும் வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதையொட்டி தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. பறக்கும் படையினர் சோதனை, விளம்பரங்கள் அழிப்பு என நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்தில் 4 மாவட்ட எஸ்.பி.க்களை மாற்றி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கரூர், ஈரோடு, நாகை, விருதுநகர் மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
கரூர் எஸ்.பி.யாக டி.என். ஹரிகிரண் பிரசாத்,
ஈரோடு எஸ்.பி.யாக டி.வி. கிரண் சுருதி,
நாகை எஸ்.பியாக சுஜித் குமார்,
விருதுநகர் எஸ்.பி.யாக என். ஸ்ரீநாதா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி., திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர்களை மாற்ற வேண்டும் என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary
Election Commission orders transfer of 4 district SPs in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தைகள் மூலம் முதல்வா் வாக்கு சேகரித்த விவகாரம்: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

விருதுநகரில் விஜய பிரபாகர் தோல்வி!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

முர்ஷிதாபாத் கலவரம்: ஆட்சியரிடம் அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




