மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் தொகுதியில் இரு கட்சியினரிடையே ஏற்பட்ட கலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அலுவலரிடம் தேர்தல் ஆணையம் அறிக்கை கோரியுள்ளது.
முர்ஷிதாபாத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி அருகே, திரிணமூல் காங்கிரஸ் மற்றும் அக்கட்சியில் இருந்து விலகிய ஹுமயூன் கபீர் தொடங்கிய ஆம் ஜனதன் உன்னயான் கட்சியினரிடையே கலவரம் ஏற்பட்டது.
இந்த கலவரத்தில் இரு கட்சியினரும் கற்களை வீசியும், மட்டை போன்ற பொருள்களைக் கொண்டும் தாக்கிக்கொண்டனர். பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
கவலரத்திற்கு முன்பு காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் செளதரி, வாக்குச்சாவடிகளில் சென்று நேரில் ஆய்வு செய்தார். சுமூகமாக வாக்குப்பதிவு நடப்பதை உறுதி செய்யும் வகையில், இவ்வாறு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
Summary
Election Commission sought a report from DM DEO on tension between Aam Janata Unnayan Party TMC workers
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘இலவச’ தேர்தல் அறிக்கைகள்!

சாத்தூரில் பிரசாரத்தின்போது இரு கட்சியினரிடையே மோதல்
காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!
மேற்கு வங்கம்: அமைச்சர் வீட்டின் மீது தாக்குதல்; விரிவான அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு



