/

மேற்கு வங்கம்: அமைச்சர் வீட்டின் மீது தாக்குதல்; விரிவான அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்!

மேற்கு வங்கத்தில் அமைச்சர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கோரியுள்ளது.

News image

திரிணமூல் காங்கிரஸ் - பாஜகவினரிடையே மோதல் - கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 3:48 am

மேற்கு வங்கத்தில் அமைச்சர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கோரியுள்ளது.

மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியின் பிரசாரத்தின்போது, பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்து, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.

மேலும், வன்முறையின்போது மாநில அமைச்சர் சசி பாஞ்சாவின் வீட்டின் மீது செங்கற்களும் வீசி, தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், அமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கையை கொல்கத்தா காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

இந்தத் தாக்குதல் 8 காவல் அதிகாரிகள் உள்பட இருதரப்பையும் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பாஜகவினர் என்று அமைச்சர் சசி பாஞ்சா குற்றம் சாட்டினாலும், இதுகுறித்து அவர் புகார் ஏதும் அளிக்கவில்லை.

இருப்பினும், காவல்துறை தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.

Summary

Election Commission seeks detailed report from Kolkata Police about attack on minister's house

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.