மேற்கு வங்கத்தில் அமைச்சர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விரிவான அறிக்கை கோரியுள்ளது.
மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியின் பிரசாரத்தின்போது, பாஜக மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் வன்முறையாக வெடித்து, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.
மேலும், வன்முறையின்போது மாநில அமைச்சர் சசி பாஞ்சாவின் வீட்டின் மீது செங்கற்களும் வீசி, தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக விரிவான அறிக்கையை கொல்கத்தா காவல்துறை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.
இந்தத் தாக்குதல் 8 காவல் அதிகாரிகள் உள்பட இருதரப்பையும் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காயமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் பாஜகவினர் என்று அமைச்சர் சசி பாஞ்சா குற்றம் சாட்டினாலும், இதுகுறித்து அவர் புகார் ஏதும் அளிக்கவில்லை.
இருப்பினும், காவல்துறை தாமாகவே முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.
Summary
Election Commission seeks detailed report from Kolkata Police about attack on minister's house
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் 432 மேற்பார்வையாளர்கள் நியமனம்: தேர்தல் ஆணையம்
மேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு! - தேர்தல் ஆணையம்
மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு!

முர்ஷிதாபாத் கலவரம்: ஆட்சியரிடம் அறிக்கை கோரும் தேர்தல் ஆணையம்!
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


