15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!

தமிழகத்தில் 84.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

News image

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்

Updated On :23 ஏப்ரல் 2026, 3:28 pm

தமிழகத்தில் 84.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல், இன்று ஒரே கட்டமாக காலை 7 மணியில் தொடங்கி, மாலை 6 மணியளவில் முடிவடைந்தது.

மேலும், தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு சதவிகிதம் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இதற்கு முன்னதாக, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 78.29 சதவிகிதமே அதிகளவாக இருந்த நிலையில், தற்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 84.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, இந்தத் தேர்தலில் ஆண்களைவிட (83.57% - 2.80 கோடி), பெண்களே (85.76% - 2.93 கோடி) அதிகம் வாக்களித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களில் 60.49 சதவிகிதத்தினரும் (7.728 பேர்) வாக்களித்துள்ளனர்.

தமிழகத்தின் 234 தொகுதிகளில் அதிகபட்சமாக கரூரில் 91.78 சதவிகிதத்தினர் வாக்களித்துள்ளனர்.

தொடர்ந்து, மே 4 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.

Summary

Tamil Nadu, with 84.69% recorded the highest-ever poll-participation since Independence.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.