தமிழகத்தில் 84.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல், இன்று ஒரே கட்டமாக காலை 7 மணியில் தொடங்கி, மாலை 6 மணியளவில் முடிவடைந்தது.
மேலும், தமிழகத்தில் இதுவரையில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு சதவிகிதம் பதிவாகியிருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதற்கு முன்னதாக, 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் 78.29 சதவிகிதமே அதிகளவாக இருந்த நிலையில், தற்போது 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 84.69 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
அதுமட்டுமின்றி, இந்தத் தேர்தலில் ஆண்களைவிட (83.57% - 2.80 கோடி), பெண்களே (85.76% - 2.93 கோடி) அதிகம் வாக்களித்துள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்களில் 60.49 சதவிகிதத்தினரும் (7.728 பேர்) வாக்களித்துள்ளனர்.
தமிழகத்தின் 234 தொகுதிகளில் அதிகபட்சமாக கரூரில் 91.78 சதவிகிதத்தினர் வாக்களித்துள்ளனர்.
தொடர்ந்து, மே 4 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது.
Summary
Tamil Nadu, with 84.69% recorded the highest-ever poll-participation since Independence.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!
தமிழ்நாட்டில் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் 84.51% வாக்குப்பதிவு! 6 மணி நிலவரம்!

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவு தொடங்கியது!!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




