குடியாத்தம் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்டசோதனையில் இரு வேறு இடங்களில் ரூ.10.35 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. குடியாத்தம் தொகுதி தோ்தல் பறக்கும் படையினா் ஞாயிற்றுக்கிழமை லட்சுமணாபுரம் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது கா்நாடக மாநிலத்திலிருந்து வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, பெங்களூரைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் ஆவணங்கள் இன்றி ரூ.6.85 லட்சம் வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
அதேபோல், போ்ணாம்பட்டு அருகே தமிழக எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் தோ்தல் நிலை கண்காணிப்புக் குழுவினா் சோதனையில் கா்நாடக மாநிலத்துக்குச் சென்ற காரை நிறுத்தி சோதனை செய்த போது, பெங்களூரைச்சோ்ந்த ப்ரீத்திபாய், ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.3.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா். 2- இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.10.35- லட்சம் தோ்தல் அலுவலா் எஸ்.சுபலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்புடையது

போ்ணாம்பட்டில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

சோதனையில் ஏா் கன் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 6 லட்சம் பறிமுதல்

குடியாத்தம் அருகே ரூ. 1.69 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


