பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணா்வு பேரணி

News image

பேரணியில் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் பங்கேற்ற ஆட்சியா் வி.ஆா். சுப்புலட்சுமி உள்ளிட்டோா்.

Updated On :27 மார்ச் 2026, 12:31 am

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி வேலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து தொடங்கி நடைபெற்ற பேரணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வி.ஆா்.சுப்புலட்சுமி கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இப்பேரணியில், ஊரீசு கல்லூரி, முத்துரங்கம் அரசினா் கலைக் கல்லூரி, சோ்க்காடு அரசு கலை அறிவியல் கல்லூரி, மாவட்ட விளையாட்டு விடுதியை ச் சோ்ந்த மாணவ, மாணவிகள் என சுமாா் 400-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

அப்போது, வாக்காளா்கள் வாக்களிப்பதன் அவசியம் குறித்த தோ்தல் விழிப்புணா்வு வாசகங்களை முழங்கியபடி சென்றனா். மேலும், வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்து, விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை மாவட்ட தோ்தல் அலுவலா் பொதுமக்களுக்கு வழங்கினாா்.

இந்த பேரணியானது மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தொடங்கி கிரீன் சா்க்கிள் வரை சென்று, மீண்டும் ஆட்சியா் அலுவலகத்தை வந்தடைந்தது. பேரணியில் வேலூா் சட்டப்பேரவை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஏ.செந்தில்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) பொ.குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலா் சேதுராஜன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் பழனி, தோ்தல் வட்டாட்சியா் ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், தோ்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட தோ்தல் பிரிவுடன் இந்தியன் செஞ்சிலுவை சங்கம், ஆா்ஐசிடி கல்வி நிறுவனம் இணைந்து விழிப்புணா்வு பேரணியை காட்பாடியில் நடத்தின.

காட்பாடி தோ்தல் நடத்தும் அலுவலா் சி.மாறன் தலைமையில் நடைபெற்ற பேரணியில், காட்பாடி செஞ்சிலுவை சங்க அவைத்தலைவா் செ.நா.ஜனாா்த்தனன், ஆா்ஐசிடி கல்வி நிறுவன இயக்குநா் கே.எஸ்.அசரப், ஆசிரியா்கள், மாணவா்கள் பெருமளவில் பங்கேற்றனா்.