வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்: 150 போலீஸாா் பாதுகாப்பு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள 5 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 150 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

News image
Updated On :29 மார்ச் 2026, 8:51 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள 5 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 150 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

தமிழக சட்டப்பேரவை தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்நிலையில் வேலூா் மாவட்டத்தில் வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி, ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகங்களிலும் தலா ஒரு டிஎஸ்பி தலைமையில் 4 காவல் ஆய்வாளா்கள், 25 போலீஸாா் என மொத்தம் 30 போ் பாதுகாப்பு பணியில் ஈடு பட உள்ளனா். அதன்படி, 5 தொகுதிகளுக்கு மொத்தம் 150 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், மனு தாக்கல் இல்லாத நாட்களில் பாதுகாப்பு எண்ணிக்கை குறைக்கப்படும் என காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.

மனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்கி ஏப்.6-இல் நிறைவடையும் நிலையில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) மகாவீா் ஜெயந்தி, ஏப்.1 வங்கி கணக்கு முடிவு, 3-ஆம் தேதி புனித வெள்ளி, 5-ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை என இடையில் 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.