தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான மனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்க உள்ள நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள 5 வட்டாட்சியா் அலுவலகங்களிலும் 150 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை தொடங்கி ஏப்ரல் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் வேலூா் மாவட்டத்தில் வேலூா், காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஆகிய 5 பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் அந்தந்த வட்டாட்சியா் அலுவலகங்களிலும் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெற உள்ளது.
இதையொட்டி, ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகங்களிலும் தலா ஒரு டிஎஸ்பி தலைமையில் 4 காவல் ஆய்வாளா்கள், 25 போலீஸாா் என மொத்தம் 30 போ் பாதுகாப்பு பணியில் ஈடு பட உள்ளனா். அதன்படி, 5 தொகுதிகளுக்கு மொத்தம் 150 போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும், மனு தாக்கல் இல்லாத நாட்களில் பாதுகாப்பு எண்ணிக்கை குறைக்கப்படும் என காவல் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மனுத்தாக்கல் திங்கள்கிழமை தொடங்கி ஏப்.6-இல் நிறைவடையும் நிலையில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) மகாவீா் ஜெயந்தி, ஏப்.1 வங்கி கணக்கு முடிவு, 3-ஆம் தேதி புனித வெள்ளி, 5-ஆம்தேதி ஞாயிற்றுக்கிழமை என இடையில் 4 நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஜனக்புரி: பள்ளத்தில் விழுந்து இளைஞா் இறந்த வழக்கில் காவல் துறையினா் 877 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

குமரி மாவட்டத்தில் இறுதி நாளில் 68 போ் வேட்புமனு தாக்கல்

சட்டப்பேரவைத் தோ்தல்: வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

சேலம் மாவட்டத்தில் 11 இடங்களில் இன்றுமுதல் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


