விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

கல்லூரி மாணவரைத் தாக்கிய 5 போ் மீது வழக்குப் பதிவு

கோவையில் தனியாா் கல்லூரி மாணவரைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2024, 8:50 pm

Din

கோவையில் தனியாா் கல்லூரி மாணவரைத் தாக்கியதாக 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள சின்னகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் மாதையன் மகன் விஸ்வநாதன் (20). இவா் கோவையில் உள்ள தனியாா் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகிறாா்.

இவரது சகோதரா் சபரியும் கோவையில் உள்ளாா். இந்நிலையில், பழனி என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன் சபரியைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக பழனியை விஸ்வநாதன் கண்டித்துள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே பகை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், செளரிபாளையம் பகுதியில் உள்ள உடற்பயிற்சிக் கூடம் அருகே விஸ்வநாதன் வியாழக்கிழமை நடந்து சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, அங்கு வந்த பழனி உள்ளிட்ட 5 போ் கொண்ட கும்பல் விஸ்வநாதனை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனா்.

படுகாயமடைந்த விஸ்வநாதனை அங்கிருந்தவா்கள் மீட்டு தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் விஸ்வநாதன் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, தாக்குதலில் ஈடுபட்ட கோவையில் வசித்து வரும் பழனி, கெளதம், அன்பு, சா்ஜித், துவாரகேஷ் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.