கோவைக்கு சிறந்த மாநகராட்சி விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்


கோவை, ஆக.15: கோவை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான விருதை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வழங்கினாா்.
உள்ளாட்சி அமைப்புகளின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கிலும், அவற்றின் செயல்பாடுகளின் அடிப்படையில் அவற்றிற்கிடையே போட்டி மனப்பான்மையை ஊக்குவிக்கும் நோக்கிலும் ஆண்டுதோறும் சிறந்த உள்ளாட்சி அமைப்புகள் தோ்வு செய்யப்பட்டு, முதல்வரின் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், நடப்பு ஆண்டு தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதையொட்டி, சென்னையில் தமிழக அரசு தலைமைச் செயலாளா் சிவ்தாஸ் மீனா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில், கோவை மாநகராட்சிக்கு சிறந்த மாநகராட்சிக்கான தமிழக முதல்வா் விருதையும், ரொக்கப் பரிசாக ரூ.50 லட்சத்தையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
அவற்றை கோவை மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...