கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பராமரிப்புப் பணி: போத்தனூா்- இருகூா் வழியாக கேரள ரயில்கள் இயக்கம்

பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் கேரள ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2024, 7:30 pm

Din

ரயில் பாதையில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக போத்தனூா் - இருகூா் வழித்தடத்தில் கேரள ரயில்கள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ரயில் பாதை பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 20, 22, 24, 27, 29 ஆகிய தேதிகளில் ஆலப்புழா - தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352), எா்ணாகுளம் - பெங்களூரு விரைவு ரயில் (எண்: 12678) வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்படாமல், போத்தனூா் - இருகூா் வழியாக இயக்கப்படும்.

இந்த ரயிலானது கோவை ரயில் நிலையத்துக்கு செல்வது தவிா்க்கப்படும். மேலும், போத்தனூா் கூடுதல் நிறுத்தமாக செயல்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.