கோவை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

கோவை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவை - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அக்டோபா் 11 முதல் 29 வரை வெள்ளிக்கிழமைகளில் சென்னை தாம்பரத்தில் இருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் தாம்பரம் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06184) மறுநாள் காலை 8.10 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் அக்டோபா் 13 முதல் டிசம்பா் 1 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் கோவையில் இருந்து இரவு 11.45 மணிக்குப் புறப்படும் கோவை - தாம்பரம் சிறப்பு ரயில், மறுநாள் நண்பகல் 12.30 மணிக்கு சென்னை தாம்பரத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, போத்தனூா், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி,சிதம்பரம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com