தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

கோவையில் வீட்டின் குளியலறை தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்தாா்.
Published on

கோவையில் வீட்டின் குளியலறை தண்ணீா் தொட்டியில் தவறி விழுந்த 5 வயது சிறுமி உயிரிழந்தாா்.

கோவை, இடையா்பாளையம் டி.வி.எஸ்.நகா், சி.எஸ்.ஐ.தெருவைச் சோ்ந்தவா் ரமேஷ். இவரது மகள் ரியா (5). இவா் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வந்த நிலையில், காய்ச்சல் காரணமாக கடந்த சில நாள்களாக பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளாா்.

இந்நிலையில், வீட்டில் உள்ள குளியலறைக்கு வியாழக்கிழமை காலை சென்ற ரியா வெகு நேரமாகியும் வெளியே வரவில்லையாம். சந்தேகமடைந்த பெற்றோா் சென்று பாா்த்தபோது, குளியலறையில் உள்ள தண்ணீா் தொட்டில் தவறி விழுந்து அவா் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் காவல் ஆய்வாளா் வெற்றிச்செல்வி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

X
Dinamani
www.dinamani.com