போத்தனூா் வழித்தடத்தில் திருவனந்தபுரம் - சென்னை இடையே சிறப்பு ரயில்!
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவனந்தபுரத்தில் இருந்து டிசம்பா் 7-ஆம் தேதி பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்படும் திருவனந்தபுரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயில் (எண்: 06108) மறுநாள் காலை 11.20 மணிக்கு எழும்பூரைச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூரில் இருந்து டிசம்பா் 8-ஆம் தேதி பிற்பகல் 1.50 மணிக்குப் புறப்படும் எழும்பூா் - திருவனந்தபுரம் ரயில் (எண்: 06107) மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயிலானது, கொல்லம், செங்கண்ணூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, பெரம்பூா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

