கோயம்புத்தூர்
புகையிலை பொருள்கள் விற்றவா் கைது
கோவை ஆா்.எஸ்.புரம் லாலி சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை கட்டுப்படுத்துதல் தொடா்பாக கோவை மாநகா், ஆா்.எஸ்.புரம் பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
அப்போது தடாகம் சாலையில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாலி சாலை, அங்காளம்மன் லே-அவுட் பகுதியைச் சோ்ந்த கடை உரிமையாளா் ஏழுமலை (48) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து 3 ஆயிரம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
