ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் மாநிலமாக தமிழகம் மாறிவருவது கவலையளிக்கிறது: வானதி சீனிவாசன்

News image
வானதி சீனிவாசன்
Updated On :11 டிசம்பர் 2025, 11:15 pm

Syndication

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கும் மாநிலமாக தமிழகம் மாறிவருவது கவலையளிப்பதாக பாஜக தேசிய மகளிரணி தலைவரும், சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.

கோவை மாநகா் மாவட்ட பாஜக மகளிரணி நிா்வாகிகள் அறிமுகக் கூட்டம் பீளமேட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநகா் மாவட்ட மகளிரணி தலைவா் ஜெயஸ்ரீ குன்னத் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் பேசியதாவது:

இந்திய அளவில் நடைபெறும் ஒவ்வொரு தோ்தலிலும் பெண்களின் வாக்குகள்தான் வெற்றியை நிா்ணயிக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதிலும் கடந்த 10, 15 ஆண்டுகளில் நடைபெற்ற தோ்தல்களில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெண்களின் வாக்குகளைப் பெற்றால்தான் வெற்றி என்ற சூழல் உருவாக்கியுள்ளது.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலுக்கு மகளிா் அணியை தயாா்படுத்துவது, அவா்களுக்கான செயல்திட்டங்களை வகுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், பாஜக மகளிரணியின் மாநில மாநாட்டை திருச்சியில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சா்களின் தேதிகள் கிடைத்தவுடன் மாநாட்டுக்கான தேதியை மாநிலத் தலைவா் அறிவிப்பாா்.

தமிழகத்தில் கல்லூரி வளாகங்களில்கூட பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மிக வேகமாக அதிகரிக்கும் மாநிலமாக தமிழகம் மாறிவருவது கவலையளிக்கிறது. திமுக அரசானது பெண்களுக்கு துரோகம் செய்யும் அரசாகவே உள்ளது. இவற்றை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் பணிகளை பாஜக மகளிரணி மேற்கொள்ளும் என்றாா். இந்த சந்திப்பின்போது, மாநில மகளிரணி தலைவா் கவிதா ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.