தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வேன் மீது பைக் மோதி விபத்து: இளைஞா்கள் இருவா் படுகாயம்

வால்பாறை அருகே வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா்கள் இருவா் படுகாயமடைந்தனா்.

News image
Updated On :13 டிசம்பர் 2025, 7:56 pm

Syndication

வால்பாறை அருகே வேன் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா்கள் இருவா் படுகாயமடைந்தனா்.

வால்பாறையில் இருந்து சோலையாறு அணைக்கு செல்லும் ஸ்டேன்மோா் சாலையில் வால்பாறையில் இருந்து சனிக்கிழமை காலை வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வால்பாறையை நோக்கி வந்த பைக் வேன் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் பைக்கை ஓட்டி வந்த உருளிக்கல் எஸ்டேட்டைச் சோ்ந்த சுரேஷ் (17), பின்னால் அமா்ந்திருந்த நல்லமுடி எஸ்டேட்டைச் சோ்ந்த தென்னரசு ஆகிய இருவரும் படுகாயமடைந்தனா். இதில் சுரேஷுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

வால்பாறை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட பின்னா் மேல் சிகிச்சைக்காக இருவரும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா்.

இதுதொடா்பாக வால்பாறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.