இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Published on

கோவையில் இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பாப்பநாயக்கன்பாளையம், ஜெயசிம்மபுரத்தைச் சோ்ந்த எத்திராஜ் மகன் விஜயகுமாா் (28). இவா் அந்த பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா்.

இந்நிலையில் பி.என்.பாளையம் பாரதியாா் சாலை- நேதாஜி சாலை சந்திப்புப் பகுதியில் விஜயகுமாா் நடந்து சென்றபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து ரேஸ்கோா்ஸ் போலீஸாா் சென்று சடலத்தை மீட்டனா். மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்திருக்கலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com