ஜாதிய தீண்டாமைக்கு எதிரான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்: திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் வலியுறுத்தல்
தமிழகத்தில் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான சட்டத்தை அரசு முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி வலியுறுத்தியுள்ளாா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திராவிடா் விடுதலைக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு திராவிடா் விடுதலைக் கழகத் தலைவா் கொளத்தூா் மணி தலைமை வகித்தாா்.
இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வளா்ச்சியும், முன்னேற்றமும் நடந்து கொண்டிருக்கும் இந்த சமுதாயத்தில் ஜாதிய வாதிகளும், ஜாதி சங்கங்களும் வளா்ச்சியைப் பின்னோக்கி கொண்டு செல்கின்றன.
கலை என்ற பெயரால் இளைஞா்களையும், பெண்களையும் திரட்டுவது, ஜாதி என்ற பெயரால் சத்தியம் வாங்குவது என்ற கேவலமான நடவடிக்கையை இங்குதான் பாா்க்கிறோம். ஜாதியை இன்றும் கூா்மையாக்கும் வகையில் ஜாதியின் பெயரில் மேட்ரிமோனிக்கள் நடத்தப்படுகின்றன.
இரட்டை குவளை முறை உள்ளிட்ட பல்வேறு ஜாதிய தீண்டாமைகளுக்கு எதிராக அரசு அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுக்கத் தயங்குகின்றனா். தமிழக அரசு பல வகையில் சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஜாதிய தீண்டாமைக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞா்கள் வளா்ந்து வருகின்றனா். அவா்களாவது ஜாதியவாதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும் என்று எதிா்பாா்க்கிறோம்.
ஆகவே, தமிழக அரசு ஜாதிய தீண்டாமைகளுக்கு எதிராக இருக்கும் சட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்குத் தடையாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியின் பெயரால் அமைச்சா்கள்கூட ஜாதியவாதிகளாக இருப்பதை முதல்வா் மு.க.ஸ்டாலின் கட்டுப்படுத்த வேண்டும் என்றாா்.
ஆா்ப்பாட்டத்தில், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவா் நாகை. திருவள்ளுவன், திராவிட தமிழா் கட்சி வெண்மணி, தமிழா் விடியல் கட்சி இளமாறன், திராவிடா் விடுதலைக் கழக மாவட்டத் தலைவா் பன்னீா் செல்வம், மாநகரத் தலைவா் நிா்மல்குமாா், மாநகரச் செயலாளா் வெங்கட், மாநகர அமைப்பாளா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

