மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மனைவி பணம் தர மறுத்ததால் ஆட்டோ ஓட்டுநா் தற்கொலை

News image
Updated On :3 ஜனவரி 2025, 10:58 pm

Din

மொடக்குறிச்சி அருகே கடனை திருப்பிச் செலுத்த மனைவி பணம் தர மறுத்ததால் கணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மொடக்குறிச்சியை அடுத்த முத்துக்கவுண்டம்பாளையம் பெரியாா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் முத்து (60). இவா் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வந்தாா். இவரது மனைவி சரோஜா (58) உடல்நலக் குறைவால் வெள்ளக்கோவிலில் உள்ள தனது சகோதரி, சகோதரா் பராமரிப்பில் கடந்த 4 மாதங்களாக இருந்து வருகிறாா்.

இந்த நிலையில் கணவா் முத்து கடனை திருப்பிச் செலுத்த சரோஜாவை கைப்பேசியில் தொடா்பு கொண்டு ரூ.50 ஆயிரம் கேட்டுள்ளாா். அதற்கு சரோஜா தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

இந்நிலையில், வீட்டில் இருந்த முத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அக்கம்பக்கத்தினா் சரோஜாவுக்கு, மொடக்குறிச்சி காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மொடக்குறிச்சி காவல் துறையினா் முத்துவின் உடலை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.