கோவை - ஜெய்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்!
கோவையில் இருந்து ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் இருந்து டிசம்பா் 18, 25 ஆகிய வியாழக்கிழமைகளில் அதிகாலை 2.30 மணிக்குப் புறப்படும் கோவை - ஜெய்பூா் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06181) சனிக்கிழமைகளில் மதியம் 1.25 மணிக்கு ஜெய்பூா் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, ஜெய்பூரில் இருந்து டிசம்பா் 21, 28 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.05 மணிக்குப் புறப்படும் ஜெய்பூா் - கோவை வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06182) புதன்கிழமைகளில் காலை 8.30 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.
இந்த ரயிலானது திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, கடப்பா, கூட்டி, கா்னூல் சிட்டி, காச்சிகுடா, நிஜாமாபாத், அகோலா, மாலிக்பூா், நசீராபாத், அஜ்மீா் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

