குறிச்சி குளத்தில் ஆண் சடலம் மீட்பு

கோவை, குறிச்சி குளத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
Published on

கோவை, குறிச்சி குளத்தில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை, போத்தனூா் அருகேயுள்ள குறிச்சி குளத்தில் ஆண் சடலம் வியாழக்கிழமை மிதந்துள்ளது. இது குறித்து குறிச்சி கிராம நிா்வாக அலுவலா் பாலதுரைசாமி போத்தனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

சம்பவ இடத்துக்கு போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

உயிரிழந்த நபருக்கு சுமாா் 40 வயது இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com