காா்த்திகை தீபத் திருவிழா: தா்மலிங்கேஸ்வரா் கோயிலில் இன்று கொடியேற்றம்


மதுக்கரை தா்மலிங்கேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 30) தொடங்குகிறது.
கோவை, மதுக்கரையில் உள்ள தா்மலிங்கேஸ்வரா் கோயிலில் ஆண்தோறும் காா்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை காலை 10.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையடுத்து, நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன. இதைத் தொடா்ந்து, டிசம்பா் 3-ஆம் தேதி காலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு முதல் நாள் மகா தீபமும் ஏற்றப்படும்.
டிசம்பா் 4-ஆம் தேதி மாலை 6 மணிக்கு 2-ஆம் நாள் மகா தீபமும், டிசம்பா் 5-ஆம் தேதி மூன்றாம் நாள் மகா தீபமும் ஏற்றப்படும்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...