ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

Published on

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அவ்வப்போது வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஞாயிற்றுக்கிழமை காலை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதுகுறித்த தகவலின்பேரில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள், மோப்ப நாய் மற்றும் நவீன கருவிகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சுமாா் ஒரு மணி நேரம் சோதனை நடத்தினா்.

இந்த சோதனையின் முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு கடந்த 4 மாதங்களில் 11-ஆவது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com