மேட்டுப்பாளையம் நகர பாஜக புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு, கட்சி வளர்ச்சி நிதி வழங்கல், கண் தானம் என முப்பெரும் விழா நடைபெற்றது.
நகரத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலர் ஜெகநாதன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலர் மயில்சாமி வரவேற்றார்.
பின்னர் நடைபெற்ற புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழாவில், நகர பொதுச் செயலாளராக கார்த்திகேயன், துணைத் தலைவர்களாக காமராஜ், மகாலிங்கம், விஜயா, புஷ்பா, முருகவேலன், சசிகுமார் ஆகியோரும், நகர செயலர்களாக ரங்கராஜ், பரமசிவம், பன்னீர்செல்வம், உமாசங்கர், சந்திரா, வள்ளியம்மாள் ஆகியோரும், நகர பொருளாளராக ராமமூர்த்தியும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் சேகர், மாவட்ட தலைவர் மோகன் மந்தராச்சலம், நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
இதில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ. 5 லட்சத்தை நகரத் தலைவர் சரவணன், பொருளாளர் ராமமூர்த்தி ஆகியோர் வழங்க, அதை மாவட்ட தலைவர் மந்தராச்சலம் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில், கட்சியினர் கையெழுத்திட்ட 100 கண் தான படிவங்களை கட்சியின் துணைத் தலைவர் சசிகுமார் வழங்க, அதை ஐ ஃபவுண்டேசன் மருத்துவமனை மருத்துவர் வம்சி பெற்றுக் கொண்டார்.
மாவட்ட அமைப்புச் செயலர் கதிர்வேல் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.