மண்​டல புற்​று​நோய் மையத்துக்கு நவீன கரு​வி​கள் கிடைப்​பது எப்​போது?​ 2 ஆண்டு​க​ளாக வெளி​நாட்டு நிறு​வ​னத்​து​டன் பேச்​சு​வார்த்தை

கோவை அரசு மருத்​து​வ​மனை வளா​கத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள மண்​டல புற்​று​நோய் மையத்​தில் நவீன கரு​வி​கள் எப்​போது நிறு​வப்​ப​டும் என்ற எதிர்​பார்ப்பு நோயா​ளி​க​ளி​டையே எழுந்​துள்​ளது.​
Updated on
2 min read

கோவை அரசு மருத்​து​வ​மனை வளா​கத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள மண்​டல புற்​று​நோய் மையத்​தில் நவீன கரு​வி​கள் எப்​போது நிறு​வப்​ப​டும் என்ற எதிர்​பார்ப்பு நோயா​ளி​க​ளி​டையே எழுந்​துள்​ளது.​
​ கோவை அரசு மருத்​து​வ​மனை வளா​கத்​தில் 30 படுக்கை வசதி கொண்ட புற்​று​நோய் சிகிச்சை மையம் செயல்​பட்டு வரு​கி​றது.​ இங்கு,​​ புற்​று​நோய் பாதிக்​கப்​பட்​ட​வர்​க​ளுக்கு அறுவை சிகிச்சை மற்​றும் கதி​ரி​யக்க சிகிச்​சை​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.​ இங்கு,​​ கோவை மற்​றும் அதைச் சுற்​றி​யுள்ள மாவட்​டங்​க​ளைச் சேர்ந்த புற்று நோயா​ளி​கள் சிகிச்​சைக்​காக வந்து செல்​கின்​ற​னர்.​ நாள்​தோ​றும் சரா​ச​ரி​யாக 200-க்கும் மேற்​பட்ட வெளி நோயா​ளி​கள் இங்கு வந்து செல்​கின்​ற​னர்.​ 30-க்கும் மேற்​பட்​டோர் உள் நோயா​ளி​க​ளா​கத் தங்கி சிகிச்சை பெற்று வரு​கின்​ற​னர்.​ ​
​ இம்​மை​யத்​தில்,​​ கோபால்ட் டெலி​தெ​ரபி எனும் கதி​ரி​யக்​கக் கருவி 1998-இல் பொருத்​தப்​பட்​டது.​ இதன் மூல​மாக ஆயி​ரக்​க​ணக்​கான புற்று நோயா​ளி​க​ளுக்கு கதி​ரி​யக்க சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கி​றது.​ இந்​நி​லை​யில்,​​ இந்​தக் கதி​ரி​யக்​கக் கரு​வி​யில் பழுது ஏற்​பட்​ட​தன் கார​ண​மாக தற்​போது,​​ நோயா​ளி​கள் சிகிச்​சைக்​காக வேறு மருத்​து​வ​ம​னைக்கு அனுப்​பப்​ப​டு​கின்​ற​னர்.​ மேலும்,​​ இந்த மையத்​தில் நோயா​ளி​க​ளின் எண்​ணிக்கை அதி​க​ரிக்​கும்​போது,​​ படுக்கை பற்​றாக்​கு​றை​யும் உள்​ளது.​
​ இந்​நி​லை​யி​லப்,​​ கோவை,​​ திருப்​பூர்,​​ ஈரோடு,​​ சேலம்,​​ நீல​கிரி,​​ நாமக்​கல்,​​ தரு​ம​புரி,​​ கிருஷ்​ண​கிரி ஆகிய 8 மாவட்​டங்​க​ளைச் சேர்ந்த மக்​க​ளின் வச​திக்​காக கோவை அரசு மருத்​து​வ​மனை வளா​கத்​தில் மண்​டல புற்​று​நோய் மையம் அமைக்க 2012-இல் அர​சாணை வெளி​யி​டப்​பட்​டது.​
​ இதைத் தொடர்ந்து முதல் கட்​ட​மாக ரூ.​ 3 கோடி நிதி ஒதுக்​கப்​பட்டு,​​ 2014-இல் புற்​று​நோய் மையத்​துக்​கான கட்​டு​மா​னப் பணி​கள் தொடங்கி,​​ சுமார் 16 ஆயி​ரம் சதுர அடி பரப்​ப​ள​வில் 3 தளங்​கள் அடங்​கிய கட்​ட​டம் அமைக்​கப்​பட்​டது.​​ மேலும்,​​ மருத்​து​வ​ம​னை​யில் ஏற்​கெ​னவே உள்ள கோபால்ட் டெலி​தெ​ரபி எனும் கதி​ரி​யக்​கக் கருவி மூல​மாக சிகிச்சை அளிக்​கும்​போது,​​ புற்​று​நோய் பாதிக்​கப்​பட்ட பகுதி தவிர உட​லில் உள்ள பிற பகு​தி​க​ளி​லும் கதி​ரி​யக்​கம் செலுத்​தப்​ப​டும்.​ இத​னால்,​​ உட​லில் உள்ள ஆரோக்​கி​ய​மான அணுக்​க​ளும் உயி​ரி​ழக்​கும்.​
​ ஆனால்,​​ தற்​போது உள்ள நவீன கரு​வி​கள் மூல​மாக சிகிச்சை அளிக்​கும்​போது புற்​று​நோய் பாதிக்​கப்​பட்ட திசுக்​க​ளுக்கு நேர​டி​யாக கதி​ரி​யக்​கத்தை செலுத்​தும்​போது புற்​று​நோய் அணுக்​கள் மட்​டுமே இறக்​கும்.​ நோயா​ளி​க​ளுக்கு வேறு எந்​த​வித பாதிப்​பும் ஏற்​ப​டாது.​ எனவே,​​ நோயா​ளிக்​குத் தர​மான புற்​று​நோய் சிகிச்சை அளிக்​கும் வகை​யில் பல்​வேறு நவீன கரு​வி​கள் பெற முடிவு செய்து 2014-இல் தமிழ்​நாடு மருத்​துவ சேவை கழ​கம் ரூ.​ 9 கோடி நிதி ஒதுக்​கப்​பட்டு உள்​ள​தாக கூறப்​ப​டு​கி​றது.​
​ இந்த நிதி​யைக் கொண்டு புற்​று​நோய் பாதிக்​கப்​பட்ட இடத்​தைக் கண்​ட​றிய ரூ.​ 1.5 கோடி மதிப்​பி​லான சி.டி.​ ஸ்டி​மு​லேட்​டர் கரு​வி​யும்,​​ ரூ.​ 1.5 கோடி மதிப்​பில் நேர​டி​யாக கதி​ரிக்​கம் செலுத்​தக் கூடிய பிராக்கி தெரபி கரு​வி​யும்,​​ 10 செ.மீ.​ தொலை​வில் இருந்து புற்​று​நோய் பாதிக்​கப்​பட்ட இடத்​துக்கு டெலி​தெ​ரபி முறை​யில் கதி​ரி​யக்க சிகிச்சை அளிக்​கக் கூடிய ரூ.​ 9 கோடி மதிப்​பி​லான லீனி​யர் எக்ஸ்​லேட்​டர் கரு​வி​யும் பெற முடிவு செய்​யப்​பட்​டது.​
​ தமிழ்​நாடு மருத்​துவ சேவை கழ​கம் மூல​மாக நவீன கரு​வி​க​ளைப் பெற ஒப்​பந்​தப் புள்ளி கோரப்​பட்​டது.​ ஆனால்,​​ கரு​வி​க​ளைத் தயா​ரிக்​கும் இரண்டு வெளி​நாட்டு நிறு​வ​னங்​கள் கரு​வி​க​ளுக்கு முன்​கூட்​டியே பணம் செலுத்த வேண்​டும் என்ற நிபந்​த​னையை முன்​வைத்து ஒப்​பந்​தப் புள்​ளி​யில் பங்​கேற்​கா​மல் புறக்​க​ணித்து வரு​கின்​றன.​ ​
​ ஆனால்,​​ அர​சின் விதி​க​ளின்​படி கரு​வி​க​ளைப் பொருத்​திய பின்​னரே அரசு சார்​பில் பணம் செலுத்​தப்​ப​டும்.​ இத​னால் நவீன கரு​வி​க​ளைப் பெற முடி​யா​மல் இரண்டு ஆண்​டு​க​ளுக்கு மேலாக வெளி​நாட்டு நிறு​வ​னத்​து​டன் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​ற​னர்.​ ​
​ மண்​டல புற்​று​நோய் மண்​டல மையம் அமைக்​கும் பணி முழு​மை​யாக முடி​வ​டைந்து ஓராண்டு ஆகி​யும் நோயா​ளி​க​ளுக்​குத் தர​மான சிகிச்சை அளிக்க கூடிய நவீன கரு​வி​க​ளைப் பெற முடி​யா​மல் கால​தா​ம​தம் ஏற்​பட்டு வரு​கி​றது.​ இதே​போல,​​ மண்​டல புற்​று​நோய் மையத்​தின் கட்​டு​மா​னப் பணி​களை முழு​மை​யாக முடிக்க பொதுப் பணித் துறை சார்​பில் ரூ.​ 92 லட்​சம் நிதி கேட்டு அர​சுக்​குப் பரிந்​து​ரைக்​கப்​பட்டு ஓராண்​டுக்​கும் மேலா​கக் காத்​தி​ருக்​கின்​ற​னர்.​ ​ ​ ​ ​ ​
​ எனவே,​​ எட்டு மாவட்ட மக்​க​ளின் நல​னைக் கருத்​தில் கொண்டு மண்​டல புற்​று​நோய் மையம் செயல்​ப​டும் வகை​யில் நவீன கரு​வி​களை பெற்று,​​ நோயா​ளி​க​ளுக்​குத் தர​மான சிகிச்​சையை விரைந்து அளிக்​கக் கூடிய வகை​யில் தமி​ழக சுகா​தா​ரத் துறை நட​வ​டிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என்​பது நோயா​ளி​க​ளின் எதிர்​பார்ப்பு ஆகும்.​ ​ ​
​ இது​கு​றித்து,​​ மருத்​து​வ​மனை இருப்​பிட மருத்​துவ அலு​வ​லர் டாக்​டர் சௌந்​த​ர​வேல் கூறி​ய​தா​வது:​
​ 8 மாவட்ட மக்​க​ளின் நலன் கருதி கோவை அரசு மருத்​து​வ​மனை வளா​கத்​தில் மண்​டல புற்​று​நோய் மையம் அமைக்க அரசு உத்​த​ர​விட்​டது.​ அத​ன​டிப்​ப​டை​யில் மையத்​துக்​கான கட்​டு​மா​னப் பணி​கள் நிறை​வ​டைந்த நிலை​யில் நவீன கரு​வி​க​ளுக்​காக காத்​தி​ருக்​கி​றோம்.​ ​
​ ஆனால்,​​ கரு​வி​யைத் தயா​ரிக்​கும் நிறு​வ​னம் விதித்​துள்ள நிபந்​தனை கார​ண​மாக கால​தா​ம​தம் ஏற்​பட்டு வரு​கி​றது.​ இது​கு​றித்து,​​ சம்​பந்​தப்​பட்ட நிறு​வ​னத்​து​டன் தமி​ழக மருத்​துவ சேவைக் கழக அதி​கா​ரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கின்​ற​னர்.​ இந்த மையம் விரை​வில் மக்​கள் பயன்​பாட்​டுக்கு வரும் என எதிர்​பார்க்​கி​றோம் என்​றார்.​

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com